உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வெள்ளகோவில் வாரச்சந்தையில் 30 டன் முருங்கைகாய் விற்பனை

Published On 2022-08-02 05:08 GMT   |   Update On 2022-08-02 05:08 GMT
  • 80 விவசாயிகள் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
  • சென்னை, கோவை, பெங்களூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கல்கத்தா ஆகிய பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு முருங்கைக்காய் வியாபாரி அனுப்பி வைத்தனார்.

வெள்ளகோவில்

வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று 80 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.12 முதல் 15 வரைக்கும், மரம் முருங்கை ரூ.10 முதல் 12 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.16 முதல் 20 வரைக்கும் கொள்முதல் செய்தனர். நேற்று கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கல்கத்தா ஆகிய பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாக முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

Tags:    

Similar News