உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கல்லூரி மேலாளர் வீட்டில் கொள்ளை

Published On 2022-10-22 08:56 GMT   |   Update On 2022-10-22 08:56 GMT
  • 2 மகன்களும் வீட்டை பூட்டி விட்டு கோபிக்கு தேர்வு எழுத சென்று விட்டனர்.
  • பீரோவில் இருந்த 5¼ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

குன்னத்தூர் :

குன்னத்தூர் அருகே சேரன் நகர் பவர் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் சண்முக ஜீவா. தனியார் கல்லூரியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி சுசீலா. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று தம்பதி வேலைக்கு சென்று விட்டனர். இவர்களது 2 மகன்களும் வீட்டை பூட்டி விட்டு கோபிக்கு தேர்வு எழுத சென்று விட்டனர். தேர்வு எழுதிவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5¼ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து குன்னதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

Tags:    

Similar News