உள்ளூர் செய்திகள்
உடுமலை மின் வாரிய அலுவலகத்தில் புதர்களை அகற்ற கோரிக்கை
- மின் கட்டணம் செலுத்துவதற்கான கட்டிட பகுதி உள்ளது.
- மின்சார வாரிய அலுவலகத்தின் முன்புறம் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.
உடுமலை :
உடுமலை திருப்பூர் சாலையில் அமைந்துள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கட்டிட பகுதி உள்ளது. இதன் பின்புறம் புதர் மண்டி காடு போல் காணப்படுகிறது. மேலும் இந்த பகுதியின் முன்புறம் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது .
புதர் நிறைந்த இந்த பகுதிக்கு செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே புதர்பகுதியை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.