உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வெள்ளகோவில் கல்வி வட்டாரத்தை தாராபுரத்தில் இணைக்க கோரிக்கை

Published On 2022-10-01 10:49 GMT   |   Update On 2022-10-01 10:49 GMT
  • ஆசிரியர்கள் சங்கங்கள் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
  • கல்வி மாவட்டம் ஒதுக்குவதில் வெள்ளகோவில் வட்டாரத்தை திருப்பூர் கல்வி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் வட்டாரத்தை தாராபுரம் கல்வி மாவட்டத்திலேயே சேர்க்க ஆசிரியர்கள் சங்கங்கள் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளகோவில் வட்டாரத்தில் உள்ள ஆசிரியர்கள் கூட்டணி சங்கம் சார்பில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்ட கல்வித்துறை, கல்வி மாவட்டம் ஒதுக்குவதில் வெள்ளகோவில் வட்டாரத்தை திருப்பூர் கல்வி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை முன்பு இருந்த தாராபுரம் கல்வி மாவட்டத்திலேயே தொடர்ந்து செயல்பட உதவிட வேண்டுமாறு மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News