உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

டெங்கு கொசு தடுப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

Published On 2023-11-08 10:36 GMT   |   Update On 2023-11-08 10:36 GMT
  • தேக்கிவைக்கும் தண்ணீரில் தான் டெங்கு கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும்.
  • பழையப் பொருள்களில் தண்ணீா் தேங்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

அவிநாசி:

அவிநாசியில் டெங்கு கொசு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்தினா் அறிவுறுத்தியுள்ளனா்.இதுகுறித்து அவிநாசி பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, செயல் அலுவலா் இந்துமதி ஆகியோா் கூறியதாவது:-

அவிநாசி பேரூராட்சியில் டெங்கு கொசு கட்டுப்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, பயன்படுத்தாத டயா்கள் உள்ளிட்ட கொசு உற்பத்திக்கு வாய்ப்புள்ள பழையப் பொருள்களில் தண்ணீா் தேங்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். வீடுகளைச் சுற்றிலும் பழைய பொருள்களை போட்டுவைக்காமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

மேலும், தேக்கிவைக்கும் தண்ணீரில் தான் டெங்கு கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் என்பதால் தண்ணீா் பிடித்து வைக்கும் பாத்திரங்களை மூடிவைக்க வேண்டும். மேலும், டெங்கு கொசு தடுப்பு பணிகளுக்கு வரும் பேரூராட்சி ஊழியா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனா்.

Tags:    

Similar News