கிராம மக்கள், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்ட போது படம்.
இரும்பு உருக்காலையை மூடக்கோரி போராட்டம்
- கடந்த 200 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம், காத்திருப்புப் போராட்டம் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை செயல்பட்டு வருகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உள்ளிட்டோர் கடந்த 200 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம், காத்திருப்புப் போராட்டம், சாலை மறியல், உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரும்பு உருக்காலையை மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உள்ளிட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பாராட்டி பேசினார்கள்.