உள்ளூர் செய்திகள்

 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட காட்சி.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

Published On 2022-09-16 07:15 GMT   |   Update On 2022-09-16 07:15 GMT
  • மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
  • தூய்மைப் பணியாளர்களுக்கு வேஷ்டி,சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னாள் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளருமான மங்கலம் அக்பர் அலியின் 8-ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மதியஉணவு வழங்கப்பட்டது.மேலும் மங்கலம் ஊராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு வேஷ்டி,சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் மங்கலம் பகுதியை சேர்ந்த சலவைத்தொழிலாளி ஒருவருக்கு இஸ்திரி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நலத்திட்ட உதவிகளை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகள் வழங்கினார்கள். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹா நசீர் தலைமையில் நடைபெற்றது. ,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மங்கலம் பகுதி தலைவர் ஜக்கிரியா சேட் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ,மங்கலம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ரபிதீன்,முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜக்கிரியா ,இந்திய தேசிய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் அப்துல் அஜீஸ்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் மங்கலம் சிராஜ்தீன்,மாணவரணி மாநில துணைத்தலைவர் மங்கலம் அப்பாஸ்,காங்கிரஸ் நிர்வாகி சபாதுரை,மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர் இத்ரீஸ்,எஸ்.டி.பி.ஐ.கட்சியைச் சேர்ந்த அபுதாஹிர்,தமுமுக. கட்சியைச் சேர்ந்த நிஷாத், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News