உள்ளூர் செய்திகள்

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்ற காட்சி. 

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

Published On 2022-09-24 07:29 GMT   |   Update On 2022-09-24 07:29 GMT
  • 16வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
  • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கரைப்புதூர் கிராமம் அல்லாளபுரம் ஸ்ரீ உலகேஸ்வர சுவாமி கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர் , நந்தி, ஸ்ரீ உலகேஸ்வரருக்கு 16வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில் , கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர்கோவில் , மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவில், மாந்தபுரம் மாந்தீஸ்வரர் கோவில், உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் ஆகிய கோவில்களில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News