உள்ளூர் செய்திகள்

பெருமாநல்லூர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-12-13 04:46 GMT   |   Update On 2022-12-13 04:46 GMT
  • நாளை 14-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது
  • அவினாசி வட்ட மின் செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பெருமாநல்லூர் :

பெருமாநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை 14-ந் தேதி (புதன்கிழமை)பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுப்பட்டி, பாண்டியன் நகர், எம்.தொட்டிபாளையம், மேற்கு பகுதி, வலசுபாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை அவினாசி வட்ட மின் செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News