கோப்பு படம்.
முதலிபாளையம், நல்லூர், பழவஞ்சிபாளையம், அலகுமலையில் 11-ம் தேதி மின்தடை
- அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இந்த துணை மின்நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- 11-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
திருப்பூர்:
திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதலிபாளையம், பழவஞ்சிபாளையம், நல்லூர், அலகுமலை துணை மின் நிலையங்களில் வருகிற 11-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இந்த துணை மின்நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
முதலிபாளையம் துணை மின்நிலையத்திற்குட்ட சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூர், மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன்நகர், ஆர்.வி.இ. நகர், கூலிப்பாளையம், காசிபாளையம், சர்க்கார் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரெங்காகவுண்டம்பாளையம், விஜயாபுரம், மானூர், செவந்தாம்பாளையம்.
நல்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், மற்றும் ராக்கியாபாளையம் பிரிவு, பழவஞ்சிபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்கா நகர், பாலாஜிநகர், அய்யப்பா நகர் மற்றும் அலகுமலை துணை மின்நிலையத்துக்குட்பட்ட பொல்லிகாளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு, நாச்சிப்பாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன்கோவில், மீனாட்சி வலசு, மருதுரையான்வலசு, முதியாநெரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிப்பாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபு நகர், காங்கேயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வசிவரம்புதூர், கோவில்வழி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.