உள்ளூர் செய்திகள்
பொங்கல் பூச்சாட்டு விழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்ற காட்சி.
பல்லடம் அருகே அம்மனுக்கு பொங்கல் பூச்சாட்டு விழா
- முளைப்பாரி ஊர்வலம், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தில், மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன், மாகாளியம்மன், முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. இந்த நிலையில், அந்தக் கோயிலில் பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதில் முளைப்பாரி ஊர்வலம், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.