உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2023-08-01 07:47 GMT   |   Update On 2023-08-01 07:47 GMT
  • மசாஜ் சென்டர்களில் ஆய்வு நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
  • மாநகரில் கோர்ட் அனுமதியின்றி முறைகேடாக செயல்படும் அனைத்து மசாஜ் சென்டர்களிலும் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படும்

திருப்பூர்:

திருப்பூரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் நூதன முறையில் பாலியல் தொழில் நடப்பதாக திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் திருப்பூரில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர்களில் ஆய்வு நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லையில் குமரன் ரோடு பென்னி காம்பவுண்ட், ஓடக்காடு புஷ்பா தியேட்டர் அருகில் செயல்பட்டு மசாஜ் சென்டர் உள்ளிட்ட மூன்று சென்டர்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அதில் திருப்பூர் பின்னிகா ம்பவுண்ட் பகுதியில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து மசாஜ் என்ற பெயரில் நூதன முறையில் பாலியல் தொழில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த சென்டரை பூட்டிய போலீசார் அங்கிருந்த உரிமையாளர் மற்றும் இரண்டு பெண்களை திருப்பூர் மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது திருப்பூர் மாநகரில் கோர்ட் அனுமதியின்றி முறைகேடாக செயல்படும் அனைத்து மசாஜ் சென்டர்களிலும் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் தென்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News