கோப்புபடம்
பிளாஸ்டிக் கழிவு தொழிற்சாலையை இடமாற்றம் செய்ய வேண்டும் - பொதுமக்கள் வலியுறுத்தல்
- தொழிற்சாலையில் இருந்து இரவு நேரங்களில் நெகிழிக் கழிவுகளை எடுத்து வந்து அருகில் உள்ள ஏரிக்கு அருகில் கொட்டி தீவைத்து எரிக்கின்றனா்.
- கண் ஏரிச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.
திருப்பூர்:
திருப்பூா், மண்ணரை பகுதியில் செயல்பட்டு வரும் நெகிழிக் கழிவுகளை எரிக்கும் தொழிற்சாலையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து திருப்பூா் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வாளரிடம் கவுண்டநாயக்கன்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
திருப்பூா் கவுண்டநாயக்கன்பாளையம் ரோஜா நகா், டி.மண்ணரை ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் மண்ணரையில் கழிவு பாலீத்தின் அறைக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து இரவு நேரங்களில் நெகிழிக் கழிவுகளை எடுத்து வந்து அருகில் உள்ள ஏரிக்கு அருகில் கொட்டி தீவைத்து எரிக்கின்றனா்.
இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு, கண் ஏரிச்சல், சளி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. ஆகவே, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்தத் தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.