உள்ளூர் செய்திகள்

சின்ன வெங்காயம் நடவு பணியில் விவசாயிகள் தீவிரம்

Published On 2022-12-16 06:45 GMT   |   Update On 2022-12-16 10:42 GMT
  • அறுவடை சீசன் இல்லாததால் இருப்பு வெங்காயம் மட்டுமே சந்தைக்கு வருகிறது.
  • பல விவசாயிகள் விதை வெங்காயம் கொள்முதல் செய்வதால் சின்ன வெங்காயத்திற்கு கிராக்கி நிலவுகிறது.

திருப்பூர் : 

மார்கழி மாதம் தொடங்கி உள்ள நிலையில் படிப்படியாக மழை குறைந்து விடும் என்பதால் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சின்ன வெங்காய நடவு பணியில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளனர்.

அறுவடை சீசன் இல்லாததால் இருப்பு வெங்காயம் மட்டுமே சந்தைக்கு வருகிறது. பல விவசாயிகள் விதை வெங்காயம் கொள்முதல் செய்வதால் சின்ன வெங்காயத்திற்கு கிராக்கி நிலவுகிறது.

வியாபாரிகள் சராசரியாக கிலோ 70 முதல் 80 ரூபாய் வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்றனர். சில்லறை விலையில் முதல் தரம் கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தரம் கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொங்கலூர் ஒன்றியம் மருதுரையான் வலசை சேர்ந்த வெங்காய வியாபாரி ரவி கூறுகையில், புதிய வெங்காயம் வர ஒரு மாதத்துக்கும் மேல் ஆகும். அதுவரை விலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை. புதிய காய்கள் பொங்கலுக்கு பின் வர துவங்கும். அதன் பின் விலை படிப்படியாக குறையும் என்றார்.

Tags:    

Similar News