உள்ளூர் செய்திகள்

தமிமுன் அன்சாரி

ஒரே நாடு ஒரே தோ்தல் சாத்தியமில்லை - தமிமுன் அன்சாரி பேட்டி

Published On 2023-09-07 07:44 GMT   |   Update On 2023-09-07 07:44 GMT
  • அடிக்கடி நூல் விலை ஏற்றத்தால் பின்னலாடை தொழில் மிகவும் நலிவடைந்து காணப்படுகிறது.
  • அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதனத்துக்கு நான் பதில் கூற முடியாது

திருப்பூர்:

ஒரே நாடு ஒரே தோ்தல் சாத்தியமில்லை என்று மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சித் தலைவா் தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.இது தொடா்பாக அவர் திருப்பூரில் நிருபர்களிடம் கூறும் போது, திருப்பூரில் அடிக்கடி நூல் விலை ஏற்றத்தால் பின்னலாடை தொழில் மிகவும் நலிவடைந்து காணப்படுகிறது. தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தி ஆலோசனை செய்ய வேண்டும்.அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதனத்துக்கு நான் பதில் கூற முடியாது. ஒரே நாடு ஒரே தோ்தல் என்பது சாத்தியமற்றது. இந்தியா என்ற பெயரை மாற்ற வேண்டும் எனக் கூறியிருப்பது மக்களைத் திசை திருப்பக் கூடிய ஒரு செயலாகும். நாம் இந்தியா்கள் என்று உலக நாடுகளுக்கு பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம், அதை மாற்ற வேண்டும் என்பது தவறான செயல் என்றாா்.

Tags:    

Similar News