உள்ளூர் செய்திகள்

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றபோது எடுத்த படம்.

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளையொட்டி திருப்பூரில் அதிமுகவினர் நலத்திட்ட உதவி, அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

Published On 2023-05-12 11:57 GMT   |   Update On 2023-05-12 11:57 GMT
  • எடப்பாடி பழனிச்சாமி நீடுடி வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
  • சிவசர்மிளா கருனை இல்லத்திற்கு டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது.

திருப்பூர் :

அ.தி.மு.க., பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு பூஜைகள் செய்தும் நலத்திட்ட உதவிகள் அன்னதானம், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீடுடி வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ தலைமையில் அவைத் தலைவர் பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் பகுதி செயலாளர் கண்ணப்பன் ஏற்பாட்டின் பெயரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு பட்டத்தரசி அம்மன் கோவிலில்ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு டேபிள் மற்றும் சேர் வழங்குதல் வழங்கப்பட்டது. பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து திருமுருகன் பூண்டி,பெரி யாயிபாளையம், சிவசர்மிளா கருனை இல்லத்திற்கு டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கவுன்சிலர் கண்ணப்பன், மாநகர் மாவட்ட இணை செயலாளர் சங்கீத சந்திரசேகர், பகுதி செயலாளர் கருணாகரன், ஹரிஹரசுதன், கே.பி.ஜி. மகேஷ்ராம், கேசவன், குமார், தொழிற்சங்க செயலாளர் கண்ண பிரான், வக்கீல் அணி செய லாளர் முருகேசன், நிர்வாகிகள் உஷா ரவிக்குமார், ஆண்டவர் பழனிச்சாமி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News