உள்ளூர் செய்திகள்
ஆட்சிமொழி சட்ட வார விழா 9-ந் தேதி தொடக்கம்
- 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு கொண்டாடப்பட உள்ளது.
- நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் வினீத் தொடங்கி வைக்கிறார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருப்பூர் மாவட்டத்தில் ஆட்சிமொழி சட்ட வாரம் வரும் 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு கொண்டாடப்பட உள்ளது. ஆட்சிமொழி சட்ட வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் நடைபெறும். இந்த ஆட்சிமொழி சட்ட வார விழாவை வரும் 9-ந் தேதி திருப்பூர் நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணிக்கு கலெக்டர் வினீத் தொடங்கி வைக்கிறார். இதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. இதேபோல் 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.