உள்ளூர் செய்திகள்

திருப்பூர் நொய்யல் ஆற்றில் கரைபுரண்டு செல்லும் தண்ணீர்.

தூர்வாரியதால் நொய்யல் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2022-08-10 10:47 GMT   |   Update On 2022-08-10 10:47 GMT
  • தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
  • நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

திருப்பூர் :

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இதுபோல் கொங்கு மண்டலமான திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு குளங்களும் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான நொய்யல் ஆற்றில் கடந்த சில நாட்களாகவே வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருப்பூர் வளர்மதி பாலம் பகுதிகளில் நின்று வெள்ளத்தை பலரும் பார்த்து செல்கிறார்கள். கரைபுரண்டு வெள்ளம் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுபோல் நொய்யல் ஆற்றில் கடந்த சில மாதங்களாகவே தூர்வாரும் பணிகள் நடந்ததால், எந்த ஒரு பாதிப்பும் இன்றி வெள்ளநீர் மாநகர் பகுதிகளில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- நொய்யல் ஆறு கோவையில் இருந்து தொடங்கி திருப்பூர் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளநீர் செல்லும் வகையில் இன்னும் கவனம் செலுத்தி தூர்வார வேண்டும். அவ்வாறு தூர்வாருவதன் மூலம் கடைகோடி பகுதிகள் வரை முழுவதுமாக உள்ள விவசாயிகளுக்கு போதுமான நீர் கிடைக்கும். அந்த பகுதிகளில் உள்ள குளங்களும் நிரம்பும் என்றனர்.

Tags:    

Similar News