உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூர் வழியாக சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

Published On 2022-10-12 05:38 GMT   |   Update On 2022-10-12 05:38 GMT
  • ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளதாக சேலம் கோட்ட அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்தனர்.
  • 2 பொது பெட்டி உள்ளிட்ட 16 பெட்டிகளை கொண்டதாக இந்த ெரயில் இருக்கும்.

திருப்பூர்:

வருகிற 25ந் தேதி, திருவனந்தபுரம் - சென்னை இடையே சிறப்பு ெரயில் (06056) இயக்கப்படுகிறது.இரவு, 7:40க்கு திருவனந்தபுரத்தில் புறப்படும் ெரயில் மறுநாள் மதியம், 12:30க்கு சென்னை சென்று சேரும்.மறுமார்க்கமாக, வரும் 26ந் தேதி மதியம், 3:10க்கு சென்னையில் புறப்படும் ெரயில் மறுநாள் காலை 7 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேரும்.

சிறப்பு ெரயில் கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம், அலுவலா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். 7ஏ.சி., பெட்டி, 6 படுக்கை வசதி முன்பதிவு, 2 பொது பெட்டி உள்ளிட்ட 16 பெட்டிகளை கொண்டதாக இந்த ெரயில் இருக்கும்.ெரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளதாக சேலம் கோட்ட அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்தனர்.

Tags:    

Similar News