உள்ளூர் செய்திகள்

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மங்களூரு-தாம்பரம் சிறப்பு ரெயில்: 12-ந்தேதி முதல் இயக்கம்

Published On 2023-11-09 10:06 GMT   |   Update On 2023-11-09 10:16 GMT
  • மங்களூரில் இருந்து தாம்பரத்துக்கு வருகிற 12-ந்தேதி, 19-ந்தேதி, 26-ந்தேதி ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
  • மங்களூரில் இருந்து தாம்பரத்துக்கு போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

திருப்பூர்:

தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மங்களூரில் இருந்து தாம்பரத்துக்கு போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி மங்களூரில் இருந்து தாம்பரத்துக்கு வருகிற 12-ந்தேதி, 19-ந்தேதி, 26-ந்தேதி ஆகிய நாட்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் 12, 19,26-ந்தேதிகளில் போத்தனூருக்கு மாலை 5.50 மணிக்கும், திருப்பூருக்கு 6.40 மணிக்கும், ஈரோட்டுக்கு இரவு 7.45 மணிக்கும், சேலத்துக்கு இரவு 9 மணிக்கும் வந்து செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News