உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

உடுமலை ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க வலியுறுத்தல்

Published On 2022-11-06 12:55 IST   |   Update On 2022-11-06 12:55:00 IST
  • உடுமலை வழியாக 4 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
  • தினமும் நூற்றுக்கணக்கான ரெயில் பயணிகள் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.

உடுமலை:

கோவை திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரெயில்வே நிலையம் உள்ளது. உடுமலை வழியாக 4 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான ரெயில் பயணிகள் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இங்கு வரும் பணிகளின் பாதுகாப்பை கருதியும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும் கண்காணிப்பு கேமரா வைக்க ெரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News