உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம் காங்கயத்தில் நாளை நடக்கிறது

Published On 2023-10-13 10:33 GMT   |   Update On 2023-10-13 10:34 GMT
  • முகாமிற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
  • ரூ.8ஆயிரம் முதல் ரூ. 10ஆயிரம் வரை மதிப்புள்ள செவிப்புலன் உதவி சாதனம் காப்பீடு திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

காங்கயம்:

காங்கயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் நாளை ( சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணி வரை செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான இலவச ஆடியோகிராம் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாமிற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முகாமிற்கு வருபவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு குறைபாடுகள் இருப்பின் அதற்கு உண்டான மருத்துவம் அளிக்கப்படும். ரூ.8ஆயிரம் முதல் ரூ. 10ஆயிரம் வரை மதிப்புள்ள செவிப்புலன் உதவி சாதனம் காப்பீடு திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

குறைபாடு உள்ளவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் மற்றும் முகாமிற்கு வருபவர்கள் தங்கள் புதிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, முதலமைச்சர் காப்பீட்டு அட்டை,முதல்-அமைச்சர் காப்பீட்டு அட்டை இல்லாதவர்கள் பழைய குடும்ப அட்டை இவைகளை கண்டிப்பாக எடுத்து வரவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News