உள்ளூர் செய்திகள்

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஜெய் சாரதா பள்ளி மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.

வடக்கு குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்டி: ஜெய் சாரதா பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2023-10-14 10:54 GMT   |   Update On 2023-10-14 11:08 GMT
  • மாவட்ட அளவிலான ஆக்கி போட்டியில் 14 மற்றும் 17 வயது பிரிவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
  • பொருளாளர் ஸ்ருதி வி. ஹரீஸ், பள்ளி முதல்வர் ஏ.எஸ்.மணிமலர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

திருப்பூர்,:

திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. இதில் ெஜய் சாரதா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆக்கி போட்டியில் 14, 17 மற்றும் 19 வயது பிரிவில் முதலிடம் பிடித்தனர். கைப்பந்து போட்டியில் 14, 17 வயது பிரிவில் முதலிடம், எறிபந்து போட்டியில் 17 வயது பிரிவில் முதலிடம், 14 வயது பிரிவில் 2-வது இடம் பெற்றனர். சதுரங்க போட்டியில் 11 வயது பிரிவில் முதலிடம் பிடித்தனர். மாணவிகள் பிரிவில் பால்பேட்மிட்டன் போட்டியில் முதலிடம் பிடித்தனர்.

மாணவருக்கான தடகள போட்டியில் 14 வயது பிரிவில் 400 மீ., 600 மீட்டரில் முதலிடம் மற்றும் 3-வது இடம், 4x100 மீட்டர் போட்டியில் முதலிடம், 17-வயது பிரிவில் 3 ஆயிரம் மீட்டர், 1500 மீட்டர், 400 மீட்டர் போட்டியில் முதலிடம் மற்றும் 2-வது இடம் பிடித்தனர். 4x100 மற்றும் 4x400 மீட்டர் போட்டியில் முதலிடமும், வட்டு எறிதல் போட்டியில் 2-வது இடமும், தடைதாண்டும் போட்டியில் 2-வது இடமும் பிடித்தனர்.

19-வயது பிரிவில் 400 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், தடை தாண்டும் போட்டியில் முதலிடம், 4x400 மீட்டர் போட்டியில் முதலிடம், நீளம் தாண்டுதல் போட்டியில் 3-வதுஇடம் பெற்றனர்.

மாணவிகள் 14 வயது பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் முதலிடம், 17 வயது பிரிவில் 400 மீட்டர், 800 மீட்டர் முதலிடம், 1500 மீட்டரில் 2-வது இடம், நீளம் தாண்டுதலில் 3-வது இடம், 4x100 மீ. போட்டியில் 2-வது இடம், மற்றும் 4x400 மீ போட்டியில் முதலிடம் பெற்றனர். 17 வயது பிரிவில் 800, 1500, 3 ஆயிரம் மீட்டர் போட்டியில் 2-வதுஇடம், உயரம் தாண்டுதலில் முதலிடம், நீளம் தாண்டுதலில் 3-வது இடம் பிடித்தனர். 4x100 மீட்டர் போட்டியில் 2-வதுஇடம், 4x400 மீட்டரில் முதலிடம், குண்டு எறிதலில் 3-வது இடம் பிடித்தனர்.

மாவட்ட அளவிலான ஆக்கி போட்டியில் 14 மற்றும் 17 வயது பிரிவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். தடகள போட்டியில் 800 மீட்டர், 1500 மீட்டர், 400 மீட்டர், 4x100 மீட்டர், 4x400மீட்டர் ஆகிய போட்டிகளில் முதல், 2-வது இடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். திருப்பூர் மாவட்ட அளவிலான தடகள போட்டியில் திருப்பூர் வடக்கு குறுமையம் முதலிடம் பெற 40 புள்ளிகள் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் ஈ.வேலுச்சாமி, பள்ளி செயலாளர் கீர்த்திகா வாணி வி.சதிஷ், பொருளாளர் ஸ்ருதி வி. ஹரீஸ், பள்ளி முதல்வர் ஏ.எஸ்.மணிமலர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News