உள்ளூர் செய்திகள்
உடுமலை அருகே மழையால் 2 வீடுகள் இடிந்தன
- பழனிச்சாமி ,கண்ணன் ஆகியோரது வீடுகள் மழைக்கு தாங்காமல் இடிந்து விழுந்தன.
- உடுமலைப்பேட்டையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
உடுமலை:
உடுமலைப்பேட்டையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது .தொடர் மழையால் திருமூர்த்தி மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த பழனிச்சாமி ,கண்ணன் ஆகியோரது வீடுகள் மழைக்கு தாங்காமல் இடிந்து விழுந்தன.
அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் இவர்கள் குடும்பத்துடன் தப்பித்தனர் .உரிய இழப்பீடு வழங்கவும்புதிய வீடுகள் கட்டித் தரவும் அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.