உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது
- பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- புறவழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
பல்லடம், ஜூலை.22-
பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் உள்ள பொள்ளாச்சி புறவழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஸ்கூட்டரில் மூட்டையுடன் சென்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது அவர் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் நல்லான்(வயது 26) என்பது தெரியவந்தது அவரிடமிருந்து 51கிலோ புகையிலைப் பொருட்கள், அவைகளை கொண்டு செல்ல பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.