உள்ளூர் செய்திகள்

மக்கள் நீதிமன்றம் நடைபெற்ற காட்சி.

பல்லடம் மக்கள் நீதிமன்றத்தில் 95 வழக்குகளுக்கு தீர்வு

Published On 2023-02-12 07:22 GMT   |   Update On 2023-02-12 07:22 GMT
  • பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
  • வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் சக்திவேல்,மற்றும் வழக்கறிஞர்கள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பல்லடம்:

பல்லடம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம், பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, உள்ளிட்ட 154 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 95 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு தொகையாக ரூ.2,31,98,192 வழங்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக காசோலை வழக்கில் ரூ.90,49,351வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் சக்திவேல்,மற்றும் வழக்கறிஞர்கள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News