உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பயிர்களுக்கு யூரியா உரம் பயன்படுத்தும் வழிமுறைகள் - வேளாண் அதிகாரி விளக்கம்

Published On 2022-12-05 07:12 GMT   |   Update On 2022-12-05 07:12 GMT
  • ஒரு மூட்டை 266 ரூபாய்க்கு விற்கிறது. மூட்டைக்கு 2,000 ரூபாய் மானியமாக மத்திய அரசு தருகிறது.
  • ஒருவர் பெயரில் சட்டவிரோதமாக யூரியா வாங்கப்படுவது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் நிலை உள்ளது.

திருப்பூர்:

விலை மலிவாக கிடைக்கும் உரங்களில் யூரியா முதன்மையானது. இதற்கு மத்திய அரசு அதிகளவில் மானியம் வழங்குகிறது. ஒரு மூட்டை 266 ரூபாய்க்கு விற்கிறது. மூட்டைக்கு 2,000 ரூபாய் மானியமாக மத்திய அரசு தருகிறது.

விலை மலிவாக கிடைப்பதால் பல ஆண்டுகளாக சாய ஆலைகள், பிரின்டிங் நிறுவனங்கள், தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது. கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது.

சில ஆண்டுகள் முன் இதற்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. தற்பொழுது ஒரு மாவட்டத்தில் உள்ள வினியோகஸ்தர் அந்த மாவட்டத்திற்குள் மட்டுமே விற்பனை செய்ய முடியும். வேறு மாவட்டத்திற்கு விற்க முடியாது. உரம் வாங்கும் விவசாயிகளின் ஆதார் எண் வாங்கப்படுகிறது.

அவர்களது ஓடிபி எண் கொடுத்து உரம் பெற்றுக் கொள்ளும் நடைமுறை உள்ளது. யூரியா அதிகம் வாங்கினால் அவர்கள் வயல்கள் ஆய்வு செய்ய ப்படுகிறது. ஒருவர் பெயரில் சட்டவிரோதமாக யூரியா வாங்கப்படுவது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் நிலை உள்ளது.

இதனால் கள்ளச் சந்தையில் விற்பனை பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. இதனால் உர மானியத்திற்காக அரசு செலவிடும் தொகை குறைந்துள்ளது. இருந்த போதிலும் விலை மலிவாக கிடைப்பதால் யூரியாவை விவசாயிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். யூரியா அதிகம் இடுவதால் நன்மைகளை விட கெடுதலே அதிகம். யூரியாவை அளவோடு தான் பயன்படுத்த வேண்டும் என வேளாண்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

இது குறித்து பொங்கலுார் வேளாண் துறை உதவி இயக்குனர் பொம்முராஜ் கூறியதாவது:-

விவசாயிகள் பெயரில் மட்டுமே ரசீது போட முடியும். முறைகேடு கண்டறியப்பட்டால் லைசென்ஸ் ரத்தாகிவிடும். விற்பனை சென்னையில் இருந்தே கண்காணிக்கப்படுகிறது. பயிருக்கு பயிர் யூரியா போடும் அளவு மாறுபடும்.சோளத்துக்கு 10 கிலோ போடலாம். 20 நாட்களுக்கு ஒரு முறை சிறிது சிறிதாக போட்டால் வீணாகாது. மேலும், ஆவியாகாது. யூரியா அதிகம் இடுவதால் எதிர்ப்பு சக்தி குறையும். நோய் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News