உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

வெள்ளகோவிலில் அணையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வாலிபர் சுருண்டு விழுந்து சாவு

Published On 2022-10-03 08:11 GMT   |   Update On 2022-10-03 08:11 GMT
  • வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
  • உறவினா்கள் இருவரோடு வெள்ளக்கோவில் உத்த மபாளையம் வட்டமலை அணைக்குச் சென்று மீன் பிடித்துள்ளாா்.

வெள்ளகோவில்:

வெள்ளக்கோவில் மூலனூா் சாலையில் வசித்துவந்தவா் விஜய் (23), கட்டுமானத் தொழிலாளி. இவா், உறவினா்கள் இருவரோடு வெள்ளக்கோவில் உத்த மபாளையம் வட்டமலை அணைக்குச் சென்று மீன் பிடித்துள்ளாா். அப்போது, விஜய்க்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். எனினும், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

Similar News