உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பல்லடத்தில் வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கைது

Published On 2022-07-24 07:01 GMT   |   Update On 2022-07-24 07:01 GMT
  • கோவை சிங்காநல்லூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கு ஆகியவற்றில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
  • பல்வேறு பிரிவுகளில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பல்லடம்:

பல்லடம் பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் பல்லடம் ஆறுமுத்தாம்பாளையம், அண்ணா நகர் பகுதியில் மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் ஐந்து பவுன் நகை திருட்டு வழக்கில் ஈடுபட்டதும், அதுபோல் பொங்கலூர், மாதப்பூர் கருப்பராயன் கோவில் அருகே ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இரண்டு பவுன் நகை பறிப்பு சம்பவம் மற்றும் புத்தெரிச்சல் பகுதியில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் நகைபறிப்பு முயற்சி, மங்கலம் பகுதியில் ஒரு பெண்ணிடம் நகைப்பறிப்பு முயற்சி மற்றும் கோவை சிங்காநல்லூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கு ஆகியவற்றில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் சூலூரை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரது மகன் வெங்கடேஷ் (வயது 30), கோவை பேரூரைச் சேர்ந்த சஜன் என்பவரது மகன் மணிகண்டன் (25), திருப்பூர் பாளையக்காட்டைச் சேர்ந்த இளங்கோ என்பவரது மகன் சூர்யா (21 ) என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 7 பவுன் நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News