உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

அவினாசி பகுதியில் சிப்காட் வராது என அரசாைண வரும் வரை போராட்டம் - கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கம் அறிவிப்பு

Published On 2022-12-12 04:08 GMT   |   Update On 2022-12-12 04:09 GMT
  • சிப்காட் வளாகம் அமைப்பதாக அரசு அறிவிப்பு இப்பகுதி மக்களை வஞ்சிப்பதாக தெரிகிறது.
  • கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கனிமொழி எம்.பி.சிப்காட் திட்டம் இங்கு வராது என வாக்குறுதி கொடுத்தார்.

 அவினாசி:

அவினாசி பகுதியில் சிப்காட் வராது என அரசாணை வரும் வரை போராட்டம் தொடரும் என கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க அவினாசி ஒன்றிய தலைவர் எம்.வேலுசாமி உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அவினாசி ஒன்றியம் தத்தனூர், புலிப்பார், புஞ்சை தாமரைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் வளாகம் அமைப்பதற்கு அரசாணை வெளியிட்டது விவசாயிகள் மத்தியில் குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கனிமொழி எம்.பி.சிப்காட் திட்டம் இங்கு வராது என வாக்குறுதி கொடுத்தார்.

சிப்காட் வளாகம் அமைப்பதாக அரசு அறிவிப்பு இப்பகுதி மக்களை வஞ்சிப்பதாக தெரிகிறது. ஆகவே சிப்காட் திட்டத்தை கைவிடப்பட்டதாக அரசு இதழ்களில் அரசாணை வெளியிட்டு விவசாய குடும்பங்களை வாழ வழிவகை செய்ய வேண்டும். சிப்காட் வராது என அரசாணை வெளியிடும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும்.இறக்குமதி செய்யப்பட்டு ரேஷன்கடைகளில் விற்கப்படும் பாமாயிலுக்கு தடை விதித்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News