உள்ளூர் செய்திகள்
குடிநீர் குழாய்  வழங்க அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்ற காட்சி. 

மாதப்பூர் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்க அடிக்கல் நாட்டு விழா

Published On 2023-04-16 07:14 GMT   |   Update On 2023-04-16 07:14 GMT
  • ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 89 வீடுகளுக்கு ரூ.5.64 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
  • ஒன்றிய செயலாளர் சந்தானம், மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையம் கிராமத்தில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 89 வீடுகளுக்கு ரூ.5.64 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாதப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பா.ஜ.க. விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார், பா.ஜ.க. திருப்பூர் மாவட்ட பொதுச் செயலாளர் கே. சி. எம். பி. சீனிவாசன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகு பிரசாத்,பா.ஜ.க.மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ்குமார், மாவட்டத் துணைத் தலைவர் வினோத் வெங்கடேஷ், ஒன்றிய செயலாளர் சந்தானம், மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News