உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

மூலனூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.39 கோடிக்கு பருத்தி ஏலம்

Published On 2023-02-19 03:47 GMT   |   Update On 2023-02-19 03:47 GMT
  • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களை சோ்ந்த 15 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.
  • பருத்தி வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது.

வெள்ளகோவில்:

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.39 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு, கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 547 விவசாயிகள் 5,464 மூட்டைகளில் மொத்தம் 1,770 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களை சோ்ந்த 15 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 6,850 முதல் ரூ. 8,699 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 8,050. கடந்த வார சராசரி விலை ரூ. 7,850. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1.39 கோடி.

பருத்தி வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் (பொறுப்பு) கண்ணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா். 

Tags:    

Similar News