உள்ளூர் செய்திகள்

செஸ் போட்டியை மேயர் தினேஷ் குமார், கலெக்டர் வினீத் ஆகியோர் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

திருப்பூரில் பள்ளி மானவர்களுகிடையே நடந்த செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி- மேயர், கலெக்டர் தொடங்கி வைத்தனர்

Published On 2022-07-20 09:39 GMT   |   Update On 2022-07-20 09:39 GMT
  • திருப்பூர் நாஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி இன்று நடைபெற்றது.
  • போட்டியில் சிறப்பிடம் பெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பரிசு வழங்கப்பட்டது.

திருப்பூர்:

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருப்பூர் நாஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் வினீத், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். இதில் 40 அரசு பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ போட்டியில் சிறப்பிடம் பெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பரிசு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News