உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

அமராவதிபாளையம் சந்தையில் ரூ.1.10 கோடிக்கு மாடுகள் விற்பனை

Published On 2022-09-23 07:35 GMT   |   Update On 2022-09-23 07:35 GMT
  • ஓணம் பண்டிகை முடிந்து இரண்டு வாரம் முடிந்த நிலையில் இந்த வாரம் கூடிய சந்தைக்கு காலை முதலே மாடு வரத்து அதிகமாக இருந்தது.
  • 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதால் மாடுகளை வாங்க வியாபாரிகள் - விவசாயிகளிடையே போட்டி நிலவியது.

திருப்பூர்:

திருப்பூர் கோவில்வழி அமராவதிபாளையத்தில் நடைபெறும் மாட்டுச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கேரளாவில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை வாங்க, விற்க வருவர்.ஓணம் பண்டிகை முடிந்து இரண்டு வாரம் முடிந்த நிலையில் இந்த வாரம் கூடிய சந்தைக்கு காலை முதலே மாடு வரத்து அதிகமாக இருந்தது.

கோவில்வழி - பெருந்தொழுவு சாலையில் 2 கி.மீ., தூரத்திற்கு மாடுகளுடன் ஆட்டோ, வேன்கள் அணிவகுத்து நின்றன. 810 மாடுகள் வந்ததால் மாலை, 4 மணி வரை சந்தை சுறுசுறுப்பாக நடந்தது.சிறிய ரக கன்றுக்குட்டிகள் 8,000 ரூபாய்க்கும், நல்ல தரமான முதல் ரக மாடுகள் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதால் மாடுகளை வாங்க வியாபாரிகள் - விவசாயிகளிடையே போட்டி நிலவியது.

இது குறித்து மாட்டுச்சந்தை ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், மாடுகளை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள கேரளா வியாபாரிகள் முன்வருவதால் அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர்.6 மாதத்துக்கு பின் தற்போது தான் 800 மாடு வந்தது. ஒரே நாளில் 1.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என்றனர்.

Tags:    

Similar News