உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்
அமராவதிபாளையம் மாட்டுச்சந்தை நேரம் மாற்றம்
- திருப்பூர் கோவில்வழி அருகேயுள்ள அமராவதிபாளையத்தில் ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை மாட்டுச்சந்தை நடக்கிறது.
- காலை 7 மணிக்கு சந்தை நுழைவு வாயில் திறக்கப்படும். மாடுகளுடன் வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் கோவில்வழி அருகேயுள்ள அமராவதிபாளையத்தில் ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை மாட்டுச்சந்தை நடக்கிறது.காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை சந்தை நடந்தது. பெருந்தொழுவு சாலையில் நெரிசல் ஏற்படுவதை தடுக்க, வாகனங்கள் இடையூறாக நிற்பதாக தொடர் புகார்கள் வந்ததையடுத்து, சந்தை நடக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
காலை 7 மணிக்கு சந்தை நுழைவு வாயில் திறக்கப்படும். மாடுகளுடன் வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். மதியம் 12 மணிக்கு சந்தை நிறைவு பெறும். சந்தை அருகே இரண்டு ஏக்கர் மைதானத்தில் விரிவான பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு மைதானம் திறக்கப்பட்டது.