உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பெருமாநல்லூரில் 20-ந்தேதி மராத்தான் போட்டி

Published On 2022-11-18 07:19 GMT   |   Update On 2022-11-18 07:19 GMT
  • 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களும்,40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் கலந்து கொள்கிறார்கள்.
  • போட்டி காலை 6 மணி அளவில் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இருந்து தொடங்குகிறது. 

பெருமாநல்லூர்:

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் வள்ளுவன் மராத்தான் போட்டி வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. போட்டி காலை 6 மணி அளவில் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இருந்து தொடங்குகிறது. இதில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களும்,40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் கலந்து கொள்கிறார்கள். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை உணவு, பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பெருமாநல்லூர் ரோட்டரி சங்கம் மற்றும் சுகன் சுதா மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்துள்ளனர். 

Tags:    

Similar News