உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

உடுமலையில் புதிய தமிழகம் கட்சி கூட்டம்

Published On 2023-04-04 11:17 GMT   |   Update On 2023-04-04 11:17 GMT
  • உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் புதிய தமிழகம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
  • மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

உடுமலை :

உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் புதிய தமிழகம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் கிருஷ்ணசாமி பேசியதாவது:- ஒவ்வொருவர் வாழ்விலும் குருவாக, வழிகாட்டியாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள் தான். ஆசிரியர்கள் இல்லை என்றால் யாரும் வாழ்வில் முன்னேற முடியாது. உடுமலையில் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முக்கிய காரணம் என்னுடைய நீண்ட நாள் ஆசை. ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவாக இங்கு கொண்டாடப்பட்டது என்றார். நிகழ்ச்சியில் குடிமங்கலம், பூளவாடி உட்பட அரசு பள்ளிகளில் 10,12 ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவி களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இறுதியாக மது ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு பொதுக்கூட்டத்தில் நடைப்பெற்றது.இதில் சட கோப ராமானுஜ ஜீயர், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி ,உடுமலை ராதாகிருஷ்ணன், பா.ஜ.க., பொதுச்செயலாளர் முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.,தனியரசு ஆகியோர்கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News