உள்ளூர் செய்திகள்

ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற காட்சி.

என் மண் என் மக்கள் யாத்திரை - தாராபுரத்திற்கு 21-ந்தேதி வருகை

Published On 2023-09-17 04:45 GMT   |   Update On 2023-09-17 04:45 GMT
  • 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணமாக யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
  • 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் கட்சியினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்

தாராபுரம்:

திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க., சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரைக்கு வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தாராபுரம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் வடுகநாதன், பொருளாளர் சுப்பு என்கிற சிவசுப்பிரமணியம் , மாவட்ட துணை தலைவர்கள் ராஜா என்கிற கோவிந்தசாமி, எஸ்.ஆர். விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட தலைவர் மங்களம் என்.ரவி கூறியதாவது:- தமிழகத்தை குறிப்பாக உலக அளவில் உற்று நோக்கும் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையை தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணமாக யாத்திரை மேற்கொண்டு வருகிறார். வருகிற 21-ந் தேதி தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வரும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.மாநில தலைவர் வருகையின் போது தாராபுரம் தொகுதியில் இருந்து யாத்திரையில் கலந்து கொள்ள சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் கட்சியினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நகர தலைவர் விநாயகம் சதீஷ், தாராபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், மேற்கு ஒன்றிய தலைவர் ராஜ்குமார், குண்டடம் கிழக்கு ஒன்றிய தலைவர் வெங்கடாசலம், குண்டடம் மேற்கு ஒன்றிய தலைவர் விஜயகுமார், மூலனூர் வடக்கு ஒன்றிய தலைவர் குழந்தைவேல், காங்கயம் தெற்கு ஒன்றிய தலைவர் பிரகாஷ், வெள்ளகோவில் நகர தலைவர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட விவசாய அணி தலைவர் விவேகானந்தன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News