உள்ளூர் செய்திகள்
சிதலமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
- சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சிறிய மழைக்கே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி வீரபாண்டி 54வது வார்டு கிருஷ்ணா நகர் ஏக்டென்ஷன் வீதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீதி சாலை மிகவும் சிதலமடைந்துள்ளது.
சிறிய மழைக்கே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து செல்கின்றார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.