உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த தாயின் 2-வது கணவர் கைது

Published On 2023-08-03 07:36 GMT   |   Update On 2023-08-03 07:36 GMT
  • கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்று தனது 19 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
  • இளம்பெண் குளிப்பதை பலமுறை வீடியோ எடுத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்பூர்:

திருப்பூர் அடுத்த பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்று தனது 19 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இதைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 2-வதுதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சரவணன் தனது மனைவியின் மகளான 19 வயது இளம்பெண் குளிப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்தார். நேற்று தற்செயலாக செல்போனை அந்தப் பெண் பார்த்தபோது தனது மகளின் குளியல் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இளம்பெண் குளிப்பதை பலமுறை வீடியோ எடுத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து பெண்ணின் தாயார் அவினாசிபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News