உள்ளூர் செய்திகள்

ம.தி.மு.க. சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட காட்சி.

ம.தி.மு.க. சார்பில் அண்ணா சிலைக்கு மாலை

Published On 2022-09-15 08:01 GMT   |   Update On 2022-09-15 08:01 GMT
  • ம.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
  • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் :

பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளையொட்டி திருப்பூர் ெரயில் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் அவை தலைவர் நேமிநாதன், பொருளாளர் சண்முகசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ரத்தினசாமி, மகளிர் அணி துணைச் செயலாளர் சாந்தாமணி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News