உள்ளூர் செய்திகள்

ஆய்வில் ஈடுபட்டுள்ள மேயர் தினேஷ்குமார்.

54 வார்டு பகுதிகளில் மேயர் தினேஷ்குமார் ஆய்வு

Published On 2022-06-29 11:14 GMT   |   Update On 2022-06-29 11:14 GMT
  • கழிவுநீர் நிரந்தரமாக வெளியேற வழிமுறை குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.
  • விரைவாக தார் சாலையை அமைத்திட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்

திருப்பூர் :

திருப்பூர் 54 வது வார்டு உட்பட்ட வீரபாண்டி, ஆலங்காடு, ஜே.ஜே நகர் ,கருப்ப கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

ஆலங்காடு பகுதியில் சாக்கடை கழிவுநீர் வெளியேற முடியாமல் இருப்பது குறித்தும், அதனை அப்புறப்படுத்த வழிமுறையும், கழிவுநீர் நிரந்தரமாக வெளியேற வழிமுறை குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். இதே போல் கருப்ப கவுண்டம்பாளையம் பகுதியில் தடைபட்டிருந்த தார்சாலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு விரைவாக தார் சாலையை அமைத்திட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் வீரபாண்டி ஜெ. ஜெ நகர், கல்லாக்காடு, முத்தனம்பாளையம், ஆகிய பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சியின் கமிஷனர் கிராந்தி குமார் பாடி, 4ம் மண்டல தலைவர் இல. பத்மநாதன் 54வது வார்டு கவுன்சிலரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளருமான சி. அருணாச்சலம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் என பலரும் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News