உள்ளூர் செய்திகள்

திருமண விழாவில் பங்கேற்றவர்களின் காட்சி

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உடுமலையில் 6 ஜோடிகளுக்கு திருமணம் - அமைச்சர் பங்கேற்பு

Published On 2023-07-08 04:03 GMT   |   Update On 2023-07-08 04:03 GMT
  • இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 6 ஜோடிகளுக்கு திருமணம் நிகழ்ச்சியை நடைபெற்றது.
  • தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாக பல்லாண்டு காலம் மணமக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

உடுமலை:

உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 6 இணையர்களுக்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் இந்து சமயஅறநிலையத் துறை சார்பில் பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள் மீட்பு மற்றும் அன்னதான திட்டம் இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் மற்றும் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்.

திருமணம் என்பது ஒரு மிகப்பெரிய செயல். அதை எல்லோராலும் சிறப்பாக செயல்படுத்த முடியாத சமயங்களில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இதுபோன்ற திட்டங்கள் மூலம் திருமணம் நடத்தி வைத்து அவர்களுக்கு தேவையான சீர்வரிசைகள் வழங்கி ஒரு சிறப்பான வாழ்க்கைக்கு அவர்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

திருமண நிகழ்ச்சியில் மணவிழா காணும் 6 இணையர்களை வாழ்த்துவதில் மிகவும் மகிழ்ச்சியும், சந்தோஷசமும் அடைகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாகவும், தமிழ்நாடு அரசு சார்பாகவும் பல்லாண்டு காலம் மணமக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

அதே போல மணமக்கள் அனைத்து செல்வங்களையும் பெற்று ஒற்றுமையோடும், விட்டுக் கொடுத்து சிறப்பான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அரசுக்கும், உங்களுடைய பெற்றோர்களுக்கும், உங்கள் திருமணத்தை நடத்தி வைத்த எங்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக உங்கள் வாழ்க்கை அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் 6 மணமக்களுக்கும் தலா சீர்வரிசை ப்பொருட்களாக, திருமங்கல்யம் 4 கிராம் தங்கம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, திருமணத்திற்கு மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு, மாலை, புஷ்பம், 1 பீரோ,1 கட்டில், மெத்தை, 2 தலையணை, 1 பாய், 2 கைக்கடிகாரம், 1 மிக்சி, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் என மொத்தம் ரூ.30,000 மதிப்பீட்டிலும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக., அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், பொருளாளர் முபாரக் அலி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, துணை ஆணையர் செந்தில்குமார்,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன், உடுமலை நகர மன்றத் தலைவர் மத்தீன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார்,எஸ்.கே. தங்கராஜ் என்ற மெய்ஞான மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் யு.என்.பி.குமார், பாபு,பிஏபி., பாசனசங்கத் தலைவர் மொடக்குப்பட்டி ரவி, உடுமலை தாசில்தார் கண்ணாமணி உள்ளிட்ட இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News