உள்ளூர் செய்திகள்

சுரேந்தர்.

தனியார் மில்லில் ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது

Published On 2022-08-18 11:58 GMT   |   Update On 2022-08-18 11:58 GMT
  • 5 வருடங்களாக வே.கள்ளிபாளையத்தை சேர்ந்த சுரேந்தர் உதவியளராக பணிபுரிந்து வந்தார்.
  • 10 தொழிலாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் 4 மாதங்களாக சம்பளம் செலுத்தியது தெரியவந்தது.

பல்லடம் :

பல்லடம் அருகேயுள்ள வே.கள்ளிபாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மில்லில் கடந்த 5 வருடங்களாக வே.கள்ளிபாளையத்தை சேர்ந்த சுரேந்தர் (வயது 25) உதவியளராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 13ந் தேதி மில்லில் ஆடிட்டிங் தணிக்கையின் போது வேலையை விட்டு நின்ற சுமார் 10 தொழிலாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் 4 மாதங்களாக சம்பளம் செலுத்தியது தெரியவந்தது. உதவியாளராக பணிபுரிந்து வந்த சுரேந்திரனிடம் விசாரிக்கையில், அவர் நிர்வாகத்தை ஏமாற்றி 4 மாதங்களாக ரூ.5 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது. இது குறித்து மில் நிர்வாக மேலாளர் மாரியப்பன் காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சுரேந்தரை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News