உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

குறுவை நெல் சாகுபடி பணிகள் தீவிரம்

Published On 2023-07-02 05:06 GMT   |   Update On 2023-07-02 05:06 GMT
  • அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் குறுவை நெல் சாகுபடியை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
  • நெற்பயிருக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, நெல்லுக்கான நுண்ணூட்ட உரம் ஆகியவையும் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு உள்ளது.

உடுமலை:

உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் குறுவை நெல் சாகுபடியை விவசாயிகள் துவக்கியுள்ளனர். நாற்றங்கால் நடவு முறை, நெல் விதைப்பு முறையில் சாகுபடி மேற்கொள்கின்றனர். விவசாயிகளுக்கு தேவையான கோ 51 விதை நெல் 11 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.அதே போல் நெற்பயிருக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, நெல்லுக்கான நுண்ணூட்ட உரம் ஆகியவையும் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு உள்ளது.

விவசாயிகள் இவற்றை வாங்கி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.   

Tags:    

Similar News