உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கொ.மு.க. தலைவர் சுதந்திர தின வாழ்த்து

Published On 2022-08-14 04:34 GMT   |   Update On 2022-08-14 04:34 GMT
  • பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம் என்று உறுதி எடுப்போம்.
  • மனிதநேயம் மிக்கவர்களாக உங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

திருப்பூர் :

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- 75-வது சுதந்திர தின ஆண்டைக் கொண்டாட தயாராகும் இந்த நேரத்தில் பலர் செய்த தியாகத்தை நாம் நினைவு கூர்ந்து நமக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் சிறப்புகளை நினைவுபடுத்திக்கொண்டு நாம் நம்முடைய அடுத்த சந்ததியினருக்கு அவசியம் அறிய செய்ய வேண்டும்.

அண்டை நாடுகளின் அச்சுறுத்தல், தீவிரவாதிகளின் அட்டகாசம் இவைகளுக்கு நடுவே நீங்கள் லட்சியவாதிகளாகவும், மனிதநேயம் மிக்கவர்களாகவும் உங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பல்வேறு தலைவர்களும், முகம் தெரியாத போராளிகளும் பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம் என்று உறுதி எடுப்போம். கொங்கு நாடு மக்கள் சார்பாகவும், கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் சார்பாகவும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News