உள்ளூர் செய்திகள்

நகர்மன்ற தலைவர் மத்தீன் நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி. நகர செயலாளர் வேலுச்சாமி கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்த காட்சி.

உடுமலையில் கருணாநிதி நினைவுநாள் நிகழ்ச்சி

Published On 2022-08-08 04:50 GMT   |   Update On 2022-08-08 04:50 GMT
  • நகர்மன்ற தலைவர் மத்தீன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
  • கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்தினர்.

உடுமலை :

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி உடுமலை நகர தி.மு.க. சார்பில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி குழந்தைகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட செயலாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன், நகர செயலாளர் சி.வேலுச்சாமி, நகர மன்ற தலைவர் மத்தீன், நகர மன்ற துணை தலைவர் எஸ்.கலைராஜன் , வக்கீல் எஸ்.செந்தில், ரேணுகா, டி ஜவகர்,அப்பாசாமி, யு .என். பி.குமார், டி.ஆறுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். உடுமலை நகர தி.மு.க. சார்பாக 32,33-வது வார்டில் கருணாநிதியின் உருவ படத்துக்கு உடுமலை நகர செயலாளர் வேலுச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் உடுமலை நகராட்சி துணைத் தலைவர் கலைராஜன், யு. என். குமார் ,வக்கீல் செந்தில், 33 வது வார்டு செயலாளர் ,முருகேசன் ,ஜவகர் மற்றும் உடுமலை நகர இளைஞரணி அமைப்பாளர் விக்ரம் ,முன்னாள் அமைப்பாளர் குமார் ,சந்திரன் ,ஆர் .டி .எஸ் .ரேணுகா ,தனபால் ,நகராட்சி கவுன்சிலர்கள் ஆறுச்சாமி ,ரீகன், சாந்தி ,கிருபாகரன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News