உள்ளூர் செய்திகள்

நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி.

பல்லடத்தில் கருணாநிதி நினைவுநாள் நிகழ்ச்சி

Published On 2022-08-07 06:22 GMT   |   Update On 2022-08-07 06:22 GMT
  • அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு.

பல்லடம் :

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு பல்லடம் தி.மு.க. சார்பில் கொசவம்பாளையம் ரோட்டில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் நகராட்சி மன்றத் தலைவர்கள் பி. ஏ. சேகர், ராமமூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் சம்பத், மலர்கொடி, திண்டு பாலு, பாஸ்கரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News