உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பி.ஏ.பி., வாய்க்காலில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-04-09 10:54 GMT   |   Update On 2023-04-09 10:54 GMT
  • .ஏ.பி., வாய்க்காலை பல ஊராட்சிகள் குப்பை கிடங்காக பயன்படுத்தி வருகின்றன.
  • இறந்த கோழிகளை வாய்க்காலில் வீசி தண்ணீரை அசுத்தப்படுத்துகின்றனர்.

உடுமலை :

உடுமலையில் இருந்து வெள்ளகோவில் வரை 126 கி.மீ., நீளமுள்ள பி.ஏ.பி., வாய்க்காலை பல ஊரா ட்சிகள் குப்பை கிடங்காக பயன்படுத்தி வருகின்றன. சுல்தான்பேட்டை, பொங்கலூர் பகுதிகளில் செயல்படும் கோழிப்ப ண்ணையாளர்கள் பலர் இறந்த கோழிகளை வாய்க்காலில் வீசி தண்ணீரை அசுத்தப்படு த்துகின்றனர். தண்ணீர் குடிக்க தகுதியற்றதாக மாறிவி ட்டதால் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு ஏராளமான நோய்கள் வருகின்றன.

கழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் முறையிட்டதை தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ரமேஷ் பொங்கலூர் மற்றும் சுல்தான்பேட்டை பகுதிகளில் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News