உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைப்பதால் உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2022-11-20 08:23 GMT   |   Update On 2022-11-20 08:23 GMT
  • பட்டுக்கூடு கிலோ 720 ரூபாய்க்கு விற்பனையானது.
  • பட்டு நூல் விலை கிலோ 4,900 முதல் 5,000 ரூபாய் வரை விற்பனையாகிறது.

திருப்பூர் :

கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாகவே பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதனால் பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் அதிகரித்துள்ளனர். தரமான பட்டுக்கூடு கிலோ 720 ரூபாய்க்கு விற்பனையானது. சுமாரான தரம் உள்ள கூடு கிலோ 350 ரூபாய்க்கு விற்பனையானது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்தாண்டு துவக்கத்தில் இருந்தே பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இப்போது வரை விலை குறையவில்லை.மார்க்கெட்டில் பட்டு நூல் விலை கிலோ 4,900 முதல் 5,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. அதனால் பட்டு நூலுக்கான தேவை அதிகரித்துள்ளது. பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.சூலூர்,சுல்தான்பேட்டை, ஜல்லிப்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக பலர் பட்டுக்கூடு உற்பத்தியை துவக்கியுள்ளனர் என்றனர்.

Tags:    

Similar News